திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று!

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று!

திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட  140ற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் பெரிய ஜீயங்கார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பதி நகரிலும், கோவில் ஊழியர்கள் மத்தியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை, எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.