சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!

திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 43 நாட்களாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது. நேற்று ஒரேநாளில் 1,027 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 12 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள தகவலில், “கொரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு வாரங்களுக்கு என்னிடமிருந்து செய்தி எதுவும் வராது. நண்பர்கள் கலங்க வேண்டாம். விரைவில் மீண்டு வருவேன். தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்திட வேண்டுகிறேன். என் உல்நலம் குறித்து நானே அவ்வப்போது பதிவிடுகின்றேன் ” என்றார்.