நாகை எம்பி செல்வராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

நாகை எம்பி செல்வராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,879 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

நாகை எம்பி செல்வராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராசுவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்ட நிலையில் தற்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர் அப்பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததாக தெரிகிறது.

நாகை எம்பி செல்வராசுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக எம்பி செல்வராசு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு இதய தொடர்பான அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 10 சட்ட மன்ற உறுப்பினார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.