கோவை சிஐடி கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!

 

கோவை சிஐடி கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!

கோவை


கோவை சிஐடி கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கோவை அவினாசி சாலையில் சிஐடி கல்லூரி எனப்படும் கோவை தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒரு மாணவி உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவை சிஐடி கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!

இதனை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியான நிலையில், மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, தொற்று உறுதியான அனைவரும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கல்லூரியில் மொத்தமாக 16 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிஐடி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.