திருச்சி- கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

 

திருச்சி- கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி- கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 7 ஆயிரத்து 556 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 130 பேர் இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். தற்போது 854 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருச்சி- கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் சிவராசு

திருச்சி மாநகர் காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம், சிறப்பு திட்டம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் யோகா கற்றுத் தரப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.