ஈரோட்டில் புதிதாக 84 பேருக்கு கொரோனா பாதிப்பு

 

ஈரோட்டில் புதிதாக 84 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு 12 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பாதிப்பில் இருந்து 46 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோட்டில் புதிதாக 84 பேருக்கு கொரோனா பாதிப்பு

தற்போது மாவட்டம் முழுவதும் 332 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 139 பேர் உயிரிழந்துள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து பாதிப்பு 80ஐ கடந்துள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.