புதுச்சேரியில் 100-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு…!

 

புதுச்சேரியில் 100-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு…!

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 100-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு…!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,07,615 லிருந்து 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,04,107 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 100-ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு…!

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை, கொம்பாக்கம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து 100ஐ நெருங்குகிறது.