“இனி தினசரி 2 ஆயிரமாக கொரோனா பாதிப்பு உயரும்” …ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி!!

 

“இனி தினசரி 2 ஆயிரமாக கொரோனா பாதிப்பு உயரும்” …ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி!!

கொரோனா அதிகரிப்புக்கும் உருமாறிய கொரோனாவுக்கும் தொடர்பில்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“இனி தினசரி 2 ஆயிரமாக கொரோனா பாதிப்பு உயரும்” …ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது; கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் தினசரி பாதிப்பு 2 ஆயிரமாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிப்படியாக கொரோனாவை குறைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .தமிழகத்தை பொருத்தவரை, கொரோனா அதிகரிப்புக்கும் உருமாறிய கொரோனாவுக்கும் தொடர்பில்லை. இதுவரை 25 லட்சம் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியுள்ளோம். இன்னும் பத்து லட்சம் தடுப்பூசி ஏப்ரல் முதல் வாரத்தில் வரும்” என்றார்.

“இனி தினசரி 2 ஆயிரமாக கொரோனா பாதிப்பு உயரும்” …ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி!!

தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ வல்லுநர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா முகாம்களாக ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த இடங்களை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.