திருவள்ளூரில் 14 ஆயிரத்தை கடந்தது கொரோனா..!

 

திருவள்ளூரில் 14 ஆயிரத்தை கடந்தது கொரோனா..!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,879 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 14 ஆயிரத்தை கடந்தது கொரோனா..!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 877 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 14 ஆயிரத்தை கடந்தது கொரோனா..!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 14,414 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 10,370 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,512 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,362 ஆக உயர்ந்துள்ளது.