கன்னியாகுமரியில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி!

 

கன்னியாகுமரியில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,680 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,30,261ஆக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி!

நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரியில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. 542 பேர் குணமடைந்துள்ள நிலையில் 720 பேர் பெற்று வருகின்றனர். மேலும் இங்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.