தேனி மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,863 ஆக அதிகரிப்பு!

 

தேனி மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,863 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது

தேனி மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,863 ஆக அதிகரிப்பு!

நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,863 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,863 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 608 பேர் குணமடைந்த நிலையில் 1737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தேனியில் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் இன்று முதல் இந்த மாத 27 ஆம் தேதி வரை கொரோனொவை கட்டுப்படுத்தும் விதமாக முழுகடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.