சென்னை விமான நிலையத்தில் 7 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா உறுதி

 

சென்னை விமான நிலையத்தில் 7 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 7 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 2,115 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,334-லிருந்து 54,449-ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் நேற்று மட்டும் 1322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,983-இல் இருந்து 38,327-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 41 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 666ஆக அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 7 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா உறுதி

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 7 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் பணியாற்றி வந்த அறைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேர் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.