லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா!

 

லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா!

லண்டனில் இருந்து விமானத்தில் மதுரை வந்த ஒரு பயணிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா!

பிரிட்டனில் வீரியமிக்க கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு ஒரே நாளில் 39,036 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,188,587 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 69,625 ஆக உயர்ந்துள்ளது. இதனால் லண்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா!

இந்நிலையில் லண்டனில் இருந்து விமானம்மூலம் மதுரை வந்த பயணிகள் 96 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் 29 பேருக்கு தொற்று அறிகுறி இருந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.