மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா!

 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து சென்னை ஐஐடி கல்லூரில் மாணவர்கள் 191 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. விடுதியில் மாணவர்கள் ஒன்று கூடிய நிலையில் தொற்று பரவியது கண்டுபிடிக்கபட்டது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா!

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியான முதலாமாண்டு மாணவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதலாமாண்டு, 4ஆம் ஆண்டு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு 3ஆக உயர்ந்துள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா!

முன்னதாக பிரிட்டனில் கொரோனா தொற்று உருமாற்றம் பெற்று தீவிரமான நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு விமானம் மூலம் வந்த 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் புதிய கொரோனா பரவாமல் இருக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.