ஏடிஜிபி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு : ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி!

 

ஏடிஜிபி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு : ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.

ஏடிஜிபி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு : ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி!

நேற்று மட்டும் 65பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 45பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஏடிஜிபி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு : ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் சென்னையில் பணியாற்றி வரும் ஏடிஜிபி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.