எடியூரப்பா அலுவலத்தில் 9 பேருக்கு கொரோனா

 

எடியூரப்பா அலுவலத்தில் 9 பேருக்கு கொரோனா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகள் நடத்திவந்த நிலையில்,
அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் எடியூரப்பா.
அதன்படி நடந்த பரிசோதனையில், முதல்வரின் தனிச்செயலாளர், பாதுகாவலர், சமையல்காரர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், முதல்வர் எடியூரப்பாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, இல்லத்திற்கு பூட்டும் போட்டுவிட்டார்கள் அதிகாரிகள்.