8 பேருக்கு கொரோனா : ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து!

 

8 பேருக்கு கொரோனா :  ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.

8 பேருக்கு கொரோனா :  ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து!

இந்நிலையில் கொரோனா காரணமாக ஐதராபாத்தில் நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்த படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா,குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வந்தனர். அண்ணாத்த படப்பிடிப்பு ரத்தாகியுள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

8 பேருக்கு கொரோனா :  ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து!

நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படமான அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

8 பேருக்கு கொரோனா :  ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து!

இதில் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பு , பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.