மதுரையில் 6 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா!

 

மதுரையில் 6 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா!

மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மதுரையில் 6 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,693 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 40 ஆயிரத்து 361ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் 6 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா!

இந்நிலையில் மதுரையில் மாணவ,மாணவியர் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடி வெடுக்கப்பட்டுள்ளது. கோச்சடை செயின்ட் ஜான்ஸ், ஆலங்குளம் சிஇஓ பள்ளியில் 2 மாணாக்கர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.