பிரபல துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

 

பிரபல துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 79,662 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.

பிரபல துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பிரபல துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வரும் அந்த கடையில் 50 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் துணிக்கடையை நகராட்சி அதிகாரிகள் மூடினர்.