மூன்று பெண் காவலர் உள்பட 4 பேருக்கு கொரோனா! – அச்சத்தில் மொராப்பூர் போலீசார்

 

மூன்று பெண் காவலர் உள்பட 4 பேருக்கு கொரோனா! – அச்சத்தில் மொராப்பூர் போலீசார்

தருமபுரி மாவட்டம் மொராப்பூர் காவல் நிலையத்தில் மூன்று பெண் காவலர் உள்பட நான்கு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் மற்ற போலீசார் அச்சத்தில் உள்ளனர்.

மூன்று பெண் காவலர் உள்பட 4 பேருக்கு கொரோனா! – அச்சத்தில் மொராப்பூர் போலீசார்தமிழகத்தில் நேற்று 3756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா உயிரிழப்பு தொற்று தொடர்பான செய்திகள் அச்சமூட்டி வருகின்றன. தருமபுரி மாவட்டம் மொராப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நான்கு பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் மூன்று பேர் பெண்கள்.
இதைத் தொடர்ந்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மூன்று பெண் காவலர் உள்பட 4 பேருக்கு கொரோனா! – அச்சத்தில் மொராப்பூர் போலீசார்காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து கழுவி சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. மேலும் சில போலீசாருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தனிமைப்படுத்தலில் இருக்க முடியாமல், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட முடியாமல் போலீசார் அவஸ்தைபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மாவட்ட மக்கள் யாருக்கும் கொரோனத் தொற்று ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கே கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டது. தற்போது காவல் நிலையத்தில் பணி புரியும் நான்கு காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தையும் பயத்தையும் அதிகரித்துள்ளது