கிளைச்சிறையில் காவலர் உள்பட 21 பேருக்கு கொரோனா!

 

கிளைச்சிறையில் காவலர் உள்பட 21 பேருக்கு கொரோனா!

திருப்பத்தூர் கிளைச் சிறையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக்காவலர்கள் உள்பட 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிளைச் சிறையில், சிறைக் காவலர் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன், கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கு, 19 ஆம் தேதி நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளைச்சிறையில் காவலர் உள்பட 21 பேருக்கு கொரோனா!

இந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிந்தும் தனிமைப்படுத்தாமல், இதர கைதிகளுடன் ஒன்றாக அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற சிறைக் கைதிகளுக்கும் நோய்த் தொற்று பரவியதாக தெரிய வந்துள்ளது. அவர்களுடன் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 4 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் அகரம் சித்த மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிறையில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஐந்து சிறைக்கைதிகள் பரோலில் வெளியே சென்ற நிலையில், அவர்களுக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிளைச் சிறை அதிகாரியின் மெத்தன போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கைதிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.