வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,496ஆக உயர்வு!

 

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,496ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 75பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,496ஆக உயர்வு!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,496ஆக உயர்வு!
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,496 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை 35 பேர் இறந்துள்ள நிலையில் 3213 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். முன்னதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.