இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,983 பேருக்கு கொரோனா!

 

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,983 பேருக்கு கொரோனா!

இதுவரை உலகம் முழுவதும் 70 லட்சத்து 86 ஆயிரத்து 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 6 ஆயிரத்து 107 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 34 லட்சத்து 59 ஆயிரத்து 972 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,983 பேருக்கு கொரோனா!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,983 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,46,628லிருந்து 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,24,095 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,135 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரவில் 85,975 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 39,314 குணமடைந்துள்ள நிலையில், 3,060 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,983 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவுக்கு 206 பேர் உயிரழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.