கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மதரீதியான பொய்யான தகவல்கள் : 356 பேர் மீது வழக்குப்பதிவு!

 

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மதரீதியான பொய்யான  தகவல்கள் : 356 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மதரீதியான பொய் தகவல்களை வெளியிடுவதாக உமர் பாரூக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மதரீதியான பொய்யான  தகவல்கள் : 356 பேர் மீது வழக்குப்பதிவு!

அதில் கொரோனா தொற்றுடன் மதத்தை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பிய சென்னையை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் 167 பேர் மீது 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மதரீதியான பொய்யான  தகவல்கள் : 356 பேர் மீது வழக்குப்பதிவு!

இதேபோல் தமிழகம் முழுவதும் 356 பேர் மீது 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மனுவில் சொல்லப்பட்டது. இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் இந்த விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.