10 லட்சத்தைக் கடந்த கொரோனா மரணங்கள் – உலகளவில் கொரோனா நிலவரம்
செப்டம்பர் 28-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 33 லட்சத்து 7 ஆயிரத்து 363 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 480 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 2 ஆயிரத்து 401 பேர்.
தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 76,66,482 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 73,21,343 பேரும், இந்தியாவில் 60,74,702 பேரும், பிரேசில் நாட்டில் 47,32,309 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 33,782 பேரும், பிரேசிலில் 14,194 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 82,767 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.
பிரேசில் மற்றும் அமெரிக்காவில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், இந்தியாவில் தினந்தோறும் அதிகளவில் அதிகரித்துக்கொண்டே உள்ளனர்.