தூத்துக்குடியில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு!

 

தூத்துக்குடியில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரேநாளில் 2,174 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று மட்டும் 48பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடியில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு!

10பேர் தனியார் மருத்துவமனையிலும், 38 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடியில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு!

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளயத்தைச் சேர்ந்தவர் ஜலால் என்ற 70 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் முதியவர் ஜலாலுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். இதன்மூலம் தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.