ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை – அமெரிக்காவுக்கு வில்லனாக மாறிய கொரோனா வைரஸ்

 

ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை – அமெரிக்காவுக்கு வில்லனாக மாறிய கொரோனா வைரஸ்

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 57 லட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 24 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 13-வது இடத்திற்கு சென்று விட்டது.

ஒரு லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை – அமெரிக்காவுக்கு வில்லனாக மாறிய கொரோனா வைரஸ்

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 16 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.