தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இறப்பவர்கள் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? – திருமாவளவன் கேள்வி

 

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இறப்பவர்கள் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? – திருமாவளவன் கேள்வி

தமிழ்நாட்டில் கொரோனோ நோய்த் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பற்றி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப் படுவதாகவும் அதை குறைத்து காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பேரிடர் முழு அடைப்பு காலத்தை மத்திய அரசும் மாநில அரசும் சரி உருப்படியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இறப்பவர்கள் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? – திருமாவளவன் கேள்வி

நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் உலக அளவில் இந்தியா ஆறாம் இடத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் எல்லா கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து தமிழக அரசு தளர்த்தி வருகிறது. இதனால் நோய் பரவல் வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் எந்த எச்சரிக்கையும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் இன்னும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இறப்பவர்கள் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? – திருமாவளவன் கேள்வி
கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்னையில் அரசு மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்படவில்லை என்ற புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அது மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள் கொரோனா சோதனை செய்துவிட்டு வந்தால் மட்டும் அனுமதிப்போம் என்று நோயாளிகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மக்களுடைய அழுத்தத்தினாலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் காரணமாகவும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இப்போது தமிழக அரசால் வரன்முறை படுத்தப்பட்ட இருந்தாலும் அவரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளில் யார் அதிகம் பணம் கொடுப்பார்கள் மட்டுமே சேர்த்துக் கொள்வது என்ற அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.


கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் அதனால் உயிர் இழப்பு என்பது மிக மிக குறைவாக இருக்கிறது என்பதே அரசு சார்பில் சொல்லப்படும் சமாதானமாக இருக்கிறது. இதனால் மக்களும் பயத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். மேற்கொள்ள வேண்டிய எந்த முன்னெச்சரிக்கையையும், கட்டுப்பாடுகளையும் மக்கள் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அரசே பொறுப்பாகும். உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. அது உண்மையாக இருந்தால் மிகப் பெரிய ஆபத்தில் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் அள்ளிக் கொண்டு இருக்கிறார்கள் என்றே பொருள்படும். எனவே இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பொது மக்கள் விழிப்போடு இருந்து மருத்துவமனைகளில் அவ்வாறு இறப்புகளை மறைக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.