விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது!
Jul 26, 2020, 12:25 IST1595746529000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விருதுநகரில் இன்று காலை நிலவரப்படி, 460 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6033 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது.