சென்னையில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

 

சென்னையில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. நேற்று வரை  சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு லட்சத்தை கடந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.