புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி

 

புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி மாநில கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலை சேர்ந்த கமலக்கண்ணன், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள அரசு இல்லத்தில் தங்கியுள்ளார். காய்ச்சல், சளி தொந்தரவின் காரணமாக சுகாதாரத்துறை சார்பில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று உறுதியானது. இதையத்து அவர், ஜிப்மரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் கந்தசாமிக்கு நடந்த பரிசோதனையில், கந்தசாமிக்கும் அவருடைய மகன் விக்னேஷுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்களும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.