நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதி: ராதிகா ட்விட்டரில் பதிவு!

 

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதி: ராதிகா ட்விட்டரில் பதிவு!

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக அவரது மனைவி , ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் சூழலிலும், கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் படி, தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதி: ராதிகா ட்விட்டரில் பதிவு!

இந்த நிலையில், பிரபல நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அவரது மனைவி ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” ஹைதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றாலும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து தெரியப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதி: ராதிகா ட்விட்டரில் பதிவு!

இந்த பதிவை ரீ ட்வீட் செய்த சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், “அப்பாவுக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. அவர் ஹைதராபாத்தில் இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.