தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதி!

 

தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் கூட, தற்போது வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக வெளியாகும் தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த சிலருக்கு கொரோனா உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்கள் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என புனேவில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் கொரோனா பரவி வருகிறது.

தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதி!

அண்மையில், ஹைதாராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்குகளில் பங்கேற்ற பலருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், நடிகர் சரத் குமார் உள்ளிட்ட பலர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.