சென்னை விமான நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி!

 

சென்னை விமான நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இடம் சென்னை தான். தமிழகத்தின் தலைநகரான சென்னையை கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுள்ளது. பிழைப்பு தேடி சென்னை வந்தவர்கள் எல்லாம், உயிர் பிழைக்கச் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுத்து விட்டனர். இவ்வாறு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னையில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னைவாசிகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவலர்கள், மருத்துவர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரவி வருகிறது.

சென்னை விமான நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிர்வாக அலுவலகத்தில் 7 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த அலுவலகத்தில் அவர்கள் பணியாற்றிய அறைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் ஊரடங்கு கடுமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானச் சேவைகள் தொடர்ந்து இயங்குவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.