ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி!

 

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அத்துடன் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ வசதிக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற புதிய பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் பலியாகி வருகின்றனர். அத்துடன் கொரோனா பாதிப்பு தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.