விருதுநகரில் இரண்டு மருத்துவர் உள்ளிட்ட 301 பேருக்கு இன்று கொரோனா உறுதி!

 

விருதுநகரில் இரண்டு மருத்துவர் உள்ளிட்ட 301 பேருக்கு இன்று கொரோனா உறுதி!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று இதுவரை 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் இரண்டு பேர் மருத்துவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்தது.

விருதுநகரில் இரண்டு மருத்துவர் உள்ளிட்ட 301 பேருக்கு இன்று கொரோனா உறுதி!தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரைக்கு இணையாக விருதுநகர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று வீரியம் அதிகரித்து வருகிறது. நேற்று 360 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று இதுவரை 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை தமிழக அரசு கொரோனா அறிக்கை வெளி வரும்போது தான் முழு விவரம் தெரியவரும்.

விருதுநகரில் இரண்டு மருத்துவர் உள்ளிட்ட 301 பேருக்கு இன்று கொரோனா உறுதி!இன்று இரண்டு மருத்துவர்கள், மூன்று காவல்துறையினர் கொரோனா உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் 70 பேருக்கும், சிவகாசியில் 61 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 4000ஐ கடந்துள்ளது.