தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி

 

தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி

சென்னை: தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு 133 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18,545 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 9909 பேர் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். ரயில்வே துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது கவலை அளிக்க கூடிய விஷயமாக இருந்து வருகிறது. தமிழக ரயில்வே போலீசார் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி

இந்த நிலையில், சென்னை தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வரும் செய்யும் மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படையினர் 15-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரிகள் இருவருக்கும் கொரோனா நோய் கண்டறியப்பட்டிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.