பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

 

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்த நிலையில், மத்திய முன்னாள் இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. இதனால், அவர் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, நேற்று இரவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

முன்னதாக, கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். கடந்த 2ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், 1 லட்சத்து 37 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தலுக்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.