மத்திய சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராய்க்கு கொரோனா!

 

மத்திய சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராய்க்கு கொரோனா!

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரை குறைந்திருந்த கொரோனா பரவல், பண்டிகைக்கு பிறகு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராய்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மத்திய சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராய்க்கு கொரோனா!

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கோபால் ராய் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தான் பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் கொரோனா இருப்பது உறுதியானதால் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உட்பட பல அமைச்சர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.