மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா!

 

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா!

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கியிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாரபட்சமின்றி தாக்கும் இந்த கொரோனா வைரஸால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.