முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா!

 

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் நிலையில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியானதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா!

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை கிண்டியில் இருக்கும் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கடந்த 7ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், கோகுல இந்திராவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.