திருச்சி மத்திய சிறைக் கைதிக்கு கொரோனா உறுதி.. மற்ற கைதிகளுக்கு பரிசோதனை!

 

திருச்சி மத்திய சிறைக் கைதிக்கு கொரோனா உறுதி.. மற்ற கைதிகளுக்கு பரிசோதனை!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியதன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியது தான். அதனால் நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை காக்க அரசும், சென்னை மாவட்ட நிர்வாகமும் இணைந்து அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

திருச்சி மத்திய சிறைக் கைதிக்கு கொரோனா உறுதி.. மற்ற கைதிகளுக்கு பரிசோதனை!
3D illustration

இந்நிலையில், சென்னை புழல் சிறைக்கு சென்று விட்டு திருச்சி மத்திய சிறைக்கு திரும்பிய கைதிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி மத்திய சிறையில் இருந்த அந்த கைதி சில நாட்களுக்கு முன்னர் சென்னை புழல் சிறைக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா பாதித்த கைதியுடன் தொடர்பில் இருந்த 33 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், சிறை காவலர்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.