திருப்பதி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மருத்துவமனையில் அனுமதி!

 

திருப்பதி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை 3.72 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.78 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் ஆந்திர மாநிலத்தில் இதுவரை 3,460 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

திருப்பதி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மருத்துவமனையில் அனுமதி!

சமீபத்தில் திருப்பதி கோயில் ஜீயர் கொரோனாவால் உயிரிழந்தார். அதுமட்டுமில்லாமல், திருப்பதிக்கு தரிசனத்துக்கு சென்ற நூற்றுக் கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ கருணாகர ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.