நடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதி!

 

நடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதி!

கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதி!

இது தொடர்பாக பாக்யராஜின் மகன் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது பெற்றோருக்கு கொரனோ உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எல்லாரும் விரைவில் நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக நடிகைகள் ஆண்ட்ரியா, தீபிகா படுகோன், மனிஷா யாதவ் உள்ளிட்டோருக்கும் நடிகர்கள் அதர்வா, செந்தில் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.