சாத்தான்குள விவாகரத்தில் கைதான காவலர் பால்துரைக்கு கொரோனா உறுதி!

 

சாத்தான்குள விவாகரத்தில் கைதான காவலர் பால்துரைக்கு கொரோனா உறுதி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள விவாகரத்தில் கைதான காவலர் பால்துரைக்கு கொரோனா உறுதி!

அதனைத்தொடர்ந்து சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதியான நிலையில், இன்று காலை மேலும் 2 அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியாகியது. இந்த நிலையில் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த எஸ்எஸ்ஐ பால்துரைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால், அவர்கள் மூலமாக பால்துரைக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.