மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா உறுதி!

 

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2 ஆவது இடத்தில் இந்தியா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கொரோனாவை முழுமையாக ஒழிக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில், அந்தந்த மாநில நிர்வாகங்கள் தற்போது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா உறுதி!

இதனிடையே அமைச்சர்கள், எம்.எல்ஏக்கள், எம்.பிக்கள் என பலருக்கும் கொரோனா பரவியது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா உறுதியானது. அதனால் அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.