சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸுக்கு கொரோனா உறுதி!

 

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸுக்கு கொரோனா உறுதி!

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் பாதுகாவலருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பாதுகாவலருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் கருணாஸ் திண்டுக்கல்லில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். பாதுகாவலருடன் இருந்ததால் கருணாஸுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.