ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா உறுதி!

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. அதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவர்க்கும் கொரோனா பரவி வருகிறது. அதே போல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா உறுதி!

சமீபத்தில் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னாயாவும் கோவை மாவட்ட ஆட்சியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு பேரும் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.