சென்னை அண்ணாநகர் திமுக எம்எல்ஏக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

 

சென்னை அண்ணாநகர் திமுக எம்எல்ஏக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சென்னை அண்ணாநகர் தொகுதியின் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே சாதாரண மக்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி கொரோனா பரவி வருகிறது. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்களும் திமுக எம்எல்ஏக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னர் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர் திமுக எம்எல்ஏக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சமீபத்தில் திமுக எம்எல்ஏக்கள் பலருக்கு நிவாரண உதவி வழங்கியதன் மூலமாக கொரோனா பரவியதால், மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகள் கொடுக்க வேண்டாம் என அரசு உத்தரவிட்டது. அதனால் தற்போது நிவாரண உதவிகள் ஏதும் வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று பரவிய வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏ உறுதியாகியுள்ளது.

சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.