நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1,761 ஆக அதிகரிப்பு!
Jul 12, 2020, 09:28 IST1594526293000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்று அதிகமாகி வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,761 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.